தமிழகத்தை பொறுத்தவரையில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அரசு அவ்வபோது பல அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அந்த கட்டத்தில் தற்சமயம் தமிழகத்தில் விண்ணப்பம் செய்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நெட் பேங்கிங் மூலமாக 45 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் செய்தால் வீடு தேடி ரேஷன் கார்டு வரும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் நியாய விலை கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.