ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித் துறை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 27.02.2023 அன்று இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் செலவைக் கண்காணிக்க வருமானவரி தலைமை இயக்குநரகத்தின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமானவரி தலைமை இயக்குநரகம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் தகவல்களை இந்தக் கட்டுப்பாட்டு மையம் பெற்றுக்கொள்ளும்.
மக்கள் 1800 425 6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார் செய்யலாம் . அதேபோல, 044-2827 1915 என்ற தொலைபேசி எண்ணிலும், itcontrol.chn@gov.in என்ற மின்னஞ்சல், 94453 94453 வாட்ஸ் அப் எண் ஆகியவை மூலம் புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.