தூள்..! தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் மட்டும் தான்… பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!

Tn Government registration 2025

தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.


சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கும்படி பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண டோக்கன்களும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு பதில், கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more: புதிய கீதை முதல் THE GOAT வரை.. விஜயின் படங்கள் சந்தித்த சர்ச்சைகளும்.. வெளியீட்டில் எழுந்த சிக்கல்களும் ஒரு பார்வை..!!

Vignesh

Next Post

GPay, PhonePe யூஸ் பண்றீங்களா..? இனி பரிவர்த்தனை தோல்வியுற்றால் உடனடி ரீஃபண்ட் கிடைக்கும்..!! அசத்தல் அப்டேட்..

Fri Jun 27 , 2025
யுபிஐ (UPI) மூலமாக அன்றாடம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பயனர்களுக்கு மிக முக்கியமான மாற்றங்களை NPCI (National Payments Corporation of India) அறிவித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், தவறான அல்லது தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போது, யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து பணம் டெபிட் ஆகியிருந்தால், அதை மீட்டெடுக்க பல […]
phonepe google pay upi 1200 jpg 1742533496946 1742533496227 1200x675 1

You May Like