எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக நிதின் அகர்வால் நியமனம்…!

எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக நிதின் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்

கேரள கேடரைச் சேர்ந்த 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான நிதின் அகர்வால், எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்த நிலையில் மத்திய அரசு அவரை நியமனம் செய்துள்ளது. தற்போது டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) தலைமையகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பணிபுரியும் நிதின் அகர்வாலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய டைரக்டர் ஜெனரலாக பதவி வழங்கப்பட்டது.


நிதின் அகர்வாலின் நியமனம் ஜூலை 31, 2026 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டிசம்பர் 31, 2022 அன்று பங்கஜ் குமார் சிங் ஓய்வு பெற்ற பிறகு BSF தலைவர் பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிதின் அகர்வால் நாளை அல்லது நாளை மறுநாள் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

பெரும் சோகம்...! பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இளம் மாடல் அழகி உயிரிழப்பு...!

Mon Jun 12 , 2023
பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது வன்ஷிகா சோப்ரா என்னும் இளம் மாடல் அழகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவின் பிலிம் சிட்டி பகுதியில் நேற்று பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இளம் மாடல் அழகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இரும்புத் தூண்கள் சரிந்து வன்ஷிகா சோப்ரா மற்றும் பாபி ராஜ் ஆகியோர் மீது விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் […]
Model Vanshika Chopra Dies in an Incident 1024x666 1

You May Like