நாள்தோறும் டிரை ஃப்ரூட்ஸ் என்று சொல்லப்படும் பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், தினசரி பாதாம் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நன்மை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் சாப்பிட்டால், பல நன்மைகள் உடலுக்கு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த பாதாமை ஊற வைத்து, காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு, சாப்பிட்டால், புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அத்துடன், இதய நோய், சர்க்கரை நோய், சரும நோய் உள்ளிட்டவை வராமல் தடுக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு, ஆறு முதல் ஏழு மணி நேரம் ஊற வைத்த பாதாம் பருப்புகளை உண்பதன் மூலமாக, மலச்சிக்கல் நீங்கும் என்றும் ரத்தத்தில் கலந்து இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் கரையும் என்றும் சொல்லப்படுகிறது.
அத்துடன், எலும்பு வளர்ச்சிக்கு தேவைப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், போன்றவை பாதாம் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.