தேனீக்கள் கொட்டியதில் 76 பேர் காயம் திருச்சி அருகே பரபரப்பு …

திருச்சி அருகே தேனீக்கள் கொட்டியதில் குடிமக்கள் 76 பர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

திருச்சி அருகே உள்ளது மடத்துக்குளம் அங்குள்ள கண்ணாடிபுத்தூர் பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதற்காக தீர்த்தம் எடுப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஏரியில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தேன்கூடு எதிர்பாராதவிதமாக கலைந்துள்ளது. இதனால் தேனீக்கள்அங்கிருப்பவர்களை கொட்ட ஆரம்பித்தது.

சிலர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். சிலர் சேலையை தலையில் போட்டபடி அங்கிருந்து செல்ல முயற்சித்தனர். ஒருவரையும் விடாமல் அனைவரையும் சரமாரியாக தேனீக்கள் தாக்கின. வயதானவர்கள் , குழந்தைகள் என 76 பேர் காயம் அடைந்தனர். வயதான சிலருக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மடத்துக்குளம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 7 பேரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒருவர் உடுமலை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சிகிச்சை பெற்று வந்தவர்களை எம்.எல்.ஏ. மகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Post

பிராங்க் வீடியோ எடுத்தால் நடவடிக்கை பாயும்….காவல்துறை எச்சரிக்கை ….

Sat Sep 3 , 2022
தனிப்பட்ட ஒரு நபரின் அனுமதியில்லாமல் பிராங்க் எனக் கூறி வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தலங்கள் மற்றும் யூ.டியூபில் பதிவேற்றம் செய்தால் நடிவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பிராங்க் செய்து மக்களின் சுதந்திரத்தை கெடுப்பது தொடர்கதையாகி வருகின்றது. சாலையில் செல்லும் சிலரை வம்பிழுப்பது, வம்படியாக அவர்களை வீடியோவுக்கு வரவைத்து அவர்களின் கோபத்துக்கு ஆளாவது, சிலர் தாக்க முற்படுவது போன்ற சம்பவங்கள் யூடியூபில் அதிரித்து வருகின்றன. இதனால் […]

You May Like