பரபரப்பு…! பிரபல கன்னட நடிகர் நாகபூஷணா பெங்களூருவில் கைது…!

கன்னட நடிகர் நாகபூஷணா பெங்களூருவில் சாலை விபத்தில் தம்பதிகள் மீது கார் மோதியதால் கைது செய்யப்பட்டார். கார் விபத்தில் 48 வயதான மனைவி பிரேமா உயிரிழந்த நிலையில், 58 வயதான கணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தம்பதியின் மகன் நடிகர் மீது போலீசில் புகார் அளித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட காவல்துறை; பெங்களூருவில் சாலை விபத்தில் தம்பதிகள் மீது நடிகர் நாகபூஷணா கார் மோதியதால் கைது செய்யப்பட்டார். விபத்தில் பிரேமா என்ற மனைவி உயிரிழந்தார். அவரது கணவர் கிரிஷன் பெங்களூரு பன்னர்கட்டா பகுதியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், கன்னட நடிகர் தானே தம்பதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பாதிக்கப்பட்டவரின் மகன் பார்த்தா, நாகபூஷனா மீது போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

நாகபூஷனா 2018 இல் சங்கஸ்த கர கணபதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் கௌசல்யா சுப்ரஜா ராமா, டேர்டெவில் முஸ்தபா, படவா ராஸ்கெல், இக்கத் போன்ற படங்களிலும் பணியாற்றினார். திரைப்படத்தில் நடித்ததற்காக நாகபூஷனா சைமா விருதையும் வென்றார்.

Vignesh

Next Post

Alert: வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும்...! மீனவர்களுக்கு எச்சரிக்கை...!

Mon Oct 2 , 2023
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் […]
’நெருங்கும் புயல்’..!! என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

You May Like