கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா (வயது 38) என்ற பெண்ணிற்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அவர் 2வது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன. கடந்த புதன்கிழமை அன்று ஷஜி (வயது 42) என்பவரை ஸ்ரீஜா 2வது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதி 3 குழந்தைகளுடன் ஷஜியின் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷஜியின் வீட்டில் ஸ்ரீஜா அவரது கணவர் ஷஜி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு ஸ்ரீஜா மற்றும் அவரது கணவர் ஷஜி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது திருமணம் செய்து 8 நாட்களில் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.