”ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியதே செல்வகணபதி தான்”..!! எடப்பாடி பழனிசாமி ஒரே போடு..!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா சிறைக்கு செல்ல முக்கிய காரணம் திமுக வேட்பாளர் செல்வகணபதி தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக தொண்டர்களின் உழைப்பால், அடையாளம் காணப்பட்ட செல்வகணபதி, தற்போது வேட்டியை மாத்தி கட்டி விட்டு திமுக வேட்பாளராக உள்ளதாக சாடினார்.

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததால், அவர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார். முன்னதாக, நம்பிக்கை துரோகத்திற்கு சிறந்த உதாரணம் எடப்பாடி பழனிசாமி என குற்றம்சாட்டியிருந்தார் செல்வகணபதி.

Read More : ”இதை யார் செய்திருக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு போடுங்கள்”..!! உதயநிதி ஸ்டாலின் தடாலடி..!!

Chella

Next Post

ஏப்ரல் 16ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Sat Apr 13 , 2024
திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தவிர பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழா காரணங்களாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், திருச்சி மாவட்டம் உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அனைத்து மக்களும் […]

You May Like