2 -ஆம் வகுப்பு சிறுமிக்கு.. ஆளில்லாத இடத்தில் பாலியல் தொல்லை.!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே தேவர் சோலை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலான் ஓரான் (வயது 30) மற்றும் ராணா ஓரான் (வயது 30) இருவரும் அங்கிருக்கும் ஊட்டி தேயிலை எஸ்டேட் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டாவது வகுப்பு படிக்கின்ற ஏழு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அந்த சிறுமியை, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர். அப்போது, சிறுமி கத்தி கூச்சலிட்ட காரணத்தால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தார்கள்.

இதை கண்ட வட மாநிலத்தவர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வடமாநில தொழிலாளர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Baskar

Next Post

பாலத்தில் அமர்ந்து போதையேற்றிக்கொண்டு பொத்தென கீழே விழுந்த போதை ஆசாமி.. அடுத்தடுத்த சம்பவம்.!

Wed Jan 25 , 2023
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குழித்துறை பகுதிக்கு அருகே கழுவன்திட்டை ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தில் 60 அடி உயரத்திலிருந்து ஒரு நபர் மது போதையில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து அந்த போதை நபரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை சம்பந்தப்பட்ட விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு ஸ்ட்ரெச்சரில் சுமந்து […]

You May Like