லஞ்சமா வேணும்…..! ஊராட்சி மன்ற தலைவரை விஜிலென்சில் போட்டுக் கொடுத்த முதியவர்…..!

ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுலராமன் பகுதியை சேர்ந்த விவசாயி பொன் பாபா பாண்டியன்(50) இவரது மனைவி ரூபாராணி (45) பொன் பாபா பாண்டியன் தன்னுடைய மனைவி ரூபா ராணியின் பெயரில் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார்.

அவரிடம் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து(70) என்பவர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு பிறகு 6,000 ரூபாய் வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறையில் பொன் பாபாபாண்டியன் நேற்று முன்தினம் புகார் வழங்கியிருக்கிறார் ஆகவே காவல்துறையினர் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் பொன் பாபா பாண்டியன் வழங்கினார்.

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன் காதல் ஆய்வாளர்கள் சால்வன்துரை, பூமிநாதன் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

தாய் உயிரிழந்த துக்கம் தாளாமல் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளித்து தற்கொலை…..! சோகத்தின் மூழ்கிய குடும்பம்…..!

Tue Jun 27 , 2023
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய பேராளி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகள்தான் சாந்தி இவர் ஒரு மாற்றுத்திறனாளி. சென்ற இரண்டு மாதத்திற்கு முன்னர் வடிவேலுவின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளச்சலில் காணப்பட்டு வந்த சாந்தி, தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தியின் உடலை விட்டு […]
சொந்த ஊருக்கு திரும்பிய உடனே..!! நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு..!! பதறியடித்து ஓடிய உறவினர்கள்..!! அதிர்ச்சி

You May Like