ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுலராமன் பகுதியை சேர்ந்த விவசாயி பொன் பாபா பாண்டியன்(50) இவரது மனைவி ரூபாராணி (45) பொன் பாபா பாண்டியன் தன்னுடைய மனைவி ரூபா ராணியின் பெயரில் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார்.
அவரிடம் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து(70) என்பவர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு பிறகு 6,000 ரூபாய் வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறையில் பொன் பாபாபாண்டியன் நேற்று முன்தினம் புகார் வழங்கியிருக்கிறார் ஆகவே காவல்துறையினர் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் பொன் பாபா பாண்டியன் வழங்கினார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன் காதல் ஆய்வாளர்கள் சால்வன்துரை, பூமிநாதன் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.