நாகூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் கஷ்டத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே அவர்களுக்கு உதவியது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது;- ஆன்மிகம் இந்தியாவின் ஆன்மாவாக உள்ளது. இந்தியா தனது சொந்த வாழ்க்கையின் மூலம் ஆன்மிகத்தின் அடிப்படையில் மக்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் சொல்லி தரும்.
மேலும் மக்கள் அகந்தை இல்லாத வாழ்க்கை வாழ்வதே இந்தியாவின் ஆன்மாவாக இருக்கிறது. இலங்கை பிரச்சனையில் இருந்த சமயம் அவர்களுக்கு உதவியது இந்தியா மட்டுமே. அதுமட்டுமல்லாமல் மாலத்தீவு தண்ணீர் நெருக்கடியை சந்தித்த போது அந்த நாட்டுக்கு தண்ணீரை அனுப்பியது இந்தியா தான். “இது தான் ஆன்மீக இந்தியா” என்றார்.