திருமணம் நிச்சயமான பெண் கடத்தல் … காரில் கடத்திச் சென்றதால் பரபரப்பு

தூத்துக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்திச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி அருகே தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் எல்லம்மாள். கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராகவன். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 7ம் தேதி செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தான் பணியாற்றி வந்த நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கே வந்த கார் ஒன்று பெண்ணை கடத்திச் சென்றது.

இதை நேரில் பார்த்தவர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்ததால் அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள்தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் முறையான பதில் தரவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர். எனவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்லம்மாள் பணியாற்றிய நிறுவனத்தில் சோலையப்பன் என்பவர் ஒரு தலையாக காதலித்ததாகவும் இதனால் பெண்ணை கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனவே சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்துள்ளனர்.

Next Post

2 மணி நேரம் தாமதம்..! பயணிகளுக்கு இலவச உணவு..! அதிரடி சலுகை அறிவித்த ரயில்வே..!

Tue Sep 13 , 2022
அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரம் தாமதமானால் பயணிகள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே, பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கு பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் இயற்கை மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், அதிலிருந்து தவிர்க்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜஸ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில் புறப்படுவதற்கு எந்த காரணத்துக்காகவும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் […]

You May Like