கார்த்திகை தீபம் முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்…! ஆன்லைன் மூலம் எப்படி முன் பதிவு செய்வது…?

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு பதிவு செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 6 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.


இந்த சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app, ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426, திருநெல்வேலி 9445014428, நாகர்கோவில் 9445014432, தூத்துக்குடி 9445014430, கோயம்புத்தூர் 9445014435, தலைமையகம் 9445014435, 9445014424 மற்றும் 9445014416, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் ‌.

Vignesh

Next Post

அச்சத்தில் மக்கள்...! டெல்லியில் பயங்கர நிலநடுக்கம்....! ரிக்டர் அளவு 2.5 ஆக பதிவு...!

Wed Nov 30 , 2022
நேற்று இரவு 9.30 மணியளவில் புது டெல்லிக்கு மேற்கே 8 கிமீ தொலைவில் 2.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி, இதுவரை உயிர் சேதமோ அல்லது கட்டிட சேதமா ஏற்படவில்லை. இரவு 9.30 மணியளவில் புது டெல்லிக்கு மேற்கே 8 கிமீ தொலைவில் 2.5 ரிக்டர் அளவில் […]
IMG 20221130 053533

You May Like