கோரத்தாண்டவம் ஆடிய நிலநடுக்கம்!… 5 முதல் 10 மீட்டர் வரை இடம்பெயர்ந்த துருக்கி!… ஆய்வாளர்கள் தகவல்!

சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.


துருக்கி- சிரியா எல்லையான காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே கடந்த 6 ந்தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,000-ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் மட்டும் 14,000 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். அதேபோல், சிரியாவிலும் 3,162 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படும் நிலையில், துருக்கியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அது அமர்ந்திருக்கும் டெக்டோனிக் தகடுகளை மூன்று அடி (10 மீட்டர்) வரை நகர்த்தியிருக்கலாம் என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். மேலும், துருக்கி மேற்கு நோக்கி சிரியாவுடன் ஒப்பிடும்போது ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை துருக்கி நழுவியிருக்கலாம் என்று இத்தாலிய நில அதிர்வு நிபுணர் பேராசிரியர் கார்லோ டோக்லியோனி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய பேராசிரியர் டோக்லியோனி, சிரியாவுடன் ஒப்பிடுகையில், மதிப்பீடுகளின் படி, துருக்கி உண்மையில் ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நழுவியுள்ளதுள்ளதாகவும் லெபனான் தலைநகர் பெய்ரூட், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இவை அனைத்தும் ஆரம்ப தரவுகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும், மேலும் துல்லியமான தகவல்கள் வரும் நாட்களில் செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கும் என்றும் இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலைக் கழகத்தின் தலைவர் கூறியுள்ளார். இதையடுத்து பேசிய பேராசிரியர் டோக்லியோனி, 190 கிலோமீட்டர் நீளமும் 25 அகலமும் கொண்ட இந்த சிதைவு, நிலத்தை கடுமையாக உலுக்கி, 9 மணி நேர இடைவெளியில் இரண்டு மிகத் தீவிரமான சிகரங்களை எட்டிய வரிசையை ஏற்படுத்தியது.நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல் மூன்று நாட்களுக்குள் மீட்கப்பட்டுள்ளனர் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேரிடர் மற்றும் சுகாதார பேராசிரியர் இலன் கெல்மன் தெரிவித்துள்ளார்.

KOKILA

Next Post

நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் மக்கள் எவ்வளவு காலம் வாழ முடியும்?... வல்லுநர்கள் சொல்வது என்ன?

Fri Feb 10 , 2023
நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் ஒருவாரம் அல்லது அதற்கு மேல் இருப்பவர்கள் அவர்களின் காயங்கள் மற்றும் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்ற நிலைமையை பொறுத்து அமைகிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுகத்தின் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17,000ஐ கடந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் உலகம் முழுவதிலும் இருந்து பேரிடர் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு விரைந்துள்ளன. […]
turkey

You May Like