குனோ தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தை குட்டிகள் மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் “வெப்பம் மற்றும் உடல் பலவீனம் காரணமாக வியாழன் அன்று இறந்ததாக, அதிகாரிகள் கூறியுள்ளனர். மார்ச் 24 அன்று நமீபிய சிறுத்தைக்கு பிறந்த குட்டிகள், தாய் மற்றும் குட்டிகள் வசிக்கும் வேலி பகுதியில் வெளிப்படையான நீரிழப்பு மற்றும் உடல் பலவீனம் காரணமாக இறந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜ்வாலா என்ற பெண் சிறுத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் நான்கு குட்டிகளை ஈன்றது. குட்டிகள் இறந்ததையடுத்து, தற்போது குனோ பூங்காவில் மொத்த குட்டிகளின் எண்ணிக்கை ஒன்றாக உள்ளது.