நமீபிய சிறுத்தைக்கு பிறந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு…!

குனோ தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தை குட்டிகள் மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் “வெப்பம் மற்றும் உடல் பலவீனம் காரணமாக வியாழன் அன்று இறந்ததாக, அதிகாரிகள் கூறியுள்ளனர். மார்ச் 24 அன்று நமீபிய சிறுத்தைக்கு பிறந்த குட்டிகள், தாய் மற்றும் குட்டிகள் வசிக்கும் வேலி பகுதியில் வெளிப்படையான நீரிழப்பு மற்றும் உடல் பலவீனம் காரணமாக இறந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜ்வாலா என்ற பெண் சிறுத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் நான்கு குட்டிகளை ஈன்றது. குட்டிகள் இறந்ததையடுத்து, தற்போது குனோ பூங்காவில் மொத்த குட்டிகளின் எண்ணிக்கை ஒன்றாக உள்ளது.

Vignesh

Next Post

மாஸ்...! 80,000 மாணவ, மாணவியர் புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க விண்ணப்பம்...! அமைச்சர் மகேஷ் தகவல்...!

Fri May 26 , 2023
நீலகிரி மாவட்டத்தில் ‘புதியன விரும்பு- 2023’ என்ற தலைப்பில், 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் மாணவர்களுக்கான, 5 நாள் பயிற்சி முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டு, 80,000 மாணவ, மாணவியர் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் பெற்றுள்ளனர். மாநிலத்தில் தொடக்க பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, 185 ஊராட்சிகளில் ஒவ்வொரு […]
கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்..!

You May Like