டெக்சாஸின் டல்லாஸ் எக்சிகியூட்டிவ் விமான நிலையத்தில் நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு உலகப் போர் கால விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன. விமானங்கள் உடனடியாக தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் 6 விமான ஊழியர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போயிங் B-17 குண்டுவீச்சு விமானத்திற்கும் சிறிய விமானத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இரண்டு விமானங்களிலும் உள்ள விமானிகளின் நிலை இன்னும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.
நேற்று டெக்சாஸில் உள்ள டல்லாஸ் எக்சிகியூட்டிவ் விமான நிலையத்தில் நடந்த நினைவேந்தல் விமானப்படை விங்ஸ் ஓவர் டல்லாஸ் நிகழ்வின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.