கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அன்று முதல் இன்று வரை இந்த போர் நடைபெற்று வருகிறது. ஆகவே உக்ரையினில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஒருபுறம் உக்ரைனை சத்தமே இல்லாமல் ரஷ்யா தன் வசம் கொண்டு வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் உக்கரைனுக்கு துணையாக நிற்கின்றன.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வருகின்ற போர் வரும் 24ஆம் தேதி உடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றனர். அத்துடன் அந்த நாடுகள் உக்கரைனுக்கு ஆயுதம், ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஜப்பான் நாட்டு பிரதமர் புமியோ கிஷிடோ உக்ரைனுக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடந்த உலகளாவிய மன்றத்தில் உரையாற்றினார் அப்போது ரஷ்ய படைகளால் உக்ரைன் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது அன்றாட வாழ்க்கையை மற்றும் உள்கட்டமைப்பை மறுபடியும் கட்டி எழுப்ப அவர்களுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது.
ஆகவே ஜப்பான் சார்பாக அவர்களுக்கு 5.5 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்படுகிறது. அதோடு வரும் 24ஆம் தேதி உடன் போர் தொடங்கி ஒரு வருட காலம் நிறைவு பெற உள்ள நிலையில், அன்றைய தினம் உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் ஜி 7 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்து இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.