பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி! -தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் வரும் 19-ந் தேதி தொடங்குகிறது.  7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,  தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சிக்கும்,  காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு சில தினங்களுக்கு முன்பு உறுதியானது. இந்த தொகுதி பங்கீட்டில் காங்கிரசுக்கு உதம்பூர்,  ஜம்மு மற்றும் லடாக் ஆகிய தொகுதிகளும்,  தேசிய மாநாட்டு கட்சிக்கு அனந்த்நாக்,  ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  இந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேசிய மாநாட்டு கட்சி இன்று அறிவித்தது.

அந்த வகையில், ஸ்ரீநகரில் ஷியா தலைவர் அகா ரூஹுல்லாவும்,  பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரும்,  முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லாவும் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்தார்.  மேலும் அனந்த்நாக் தொகுதியில் குஜ்ஜார் தலைவர் மியான் அல்தாப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

’உதயசூரியன் தமிழகத்தில் உதிக்கக் கூடாது’..!! நிர்மலா சீதாராமன் அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

Fri Apr 12 , 2024
‘போதைப் பொருட்கள் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் பிழைக்கக் கூடிய எந்தக் குடும்பமும் வாழ்ந்தது இல்லை’ என்று ஓசூரில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். ஓசூர் ராம்நகரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ”எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த மக்களவை […]

You May Like