கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையில் இந்தியா ஒரு மகத்தான சாதனையை செய்து உள்ளது. இந்தியாவில் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் பரிவர்த்தனைகள் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.
இந்தநிலையில், நாட்டில் மே மாதம் 1868 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. மொத்த மதிப்பு ரூ.25.1 லட்சம் கோடி ஆகும். இதற்கு முன் ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக ரூ.23.9 லட்சம் கோடிக்கு 1789 கோடி பரிவத்தனைகள் நடந்துள்ளன. டிஜிட்டல் பரிவத்தனை அதிகம் நடந்தாலும் மார்ச் மாதம் ரூ.36.86 லட்சம் கோடிக்கு பணப் புழக்கம் இருந்துள்ளது.
முன்னதாக, மார்ச் 2025 இல் பரிவர்த்தனை மதிப்பு ரூ.24.77 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது முந்தைய பிப்ரவரி மாதத்தின் ரூ.21.96 லட்சம் கோடியிலிருந்து 12.7% அதிகரிப்பையும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.19.78 லட்சம் கோடியிலிருந்து 25% குறிப்பிடத்தக்க அதிகரிப்பையும் குறிக்கிறது.
நாட்டின் அன்றாட பணப்பரிவர்த்தனை செயல்பாட்டை எளிமையாக்கும் நோக்கில் மத்திய அரசு யுபிஐ கட்டமைப்பை உருவாக்கியது. 2016-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் பெரும் மாற்றத்தைக் ஏற்படுத்தியது. தற்போது நாடு முழுவதும் பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரையில் பிரதானமாக யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.
வெளிநாடுகளிலும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. சமீபத்தில் மாலத்தீவில் யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Readmore: ரயில் பயணிகளே உஷார்.. இந்த செயலிகளை ஒரு போதும் பயன்படுத்த வேண்டாம்..!! – இந்திய ரயில்வே எச்சரிக்கை