அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறதா?… இந்த சேவை பற்றி தெரியுமா?… ஒரு மணி நேரத்தில் ரத்தம் உங்களை தேடிவரும்!

அவசரமாக இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு மத்திய அரசு அமல்படுத்தியுள்ள திட்டம் பிளட் ஆன் 104 திட்டம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் அடுத்த ஒரு மணிநேரத்தில் இரத்தம் உங்களை தேடி வரும். இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ரத்த வங்கிக்காக, தனியாக அனைத்து மாநிலங்களிலும் கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எண்தான் 104 ஆகும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் இந்த 104 கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால் சென்டர்களுக்குப் போன் செய்து தேவையான ரத்தம் குறித்த தகவலைக் குறிப்பிட்டால், உடனடியாக அருகில் உள்ள ரத்த வங்கிகளுக்கு இந்த கால் சென்டரிலிருந்து தொடர்பு கொண்டு, குறித்த முகவரிக்கு ரத்தம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வார்கள். இது ஒரு 24 மணி நேர சேவையாகும். இந்த சேவையை 40 கிலோமீட்டருக்குள் இருப்பவர்கள் பயன்படுத்த முடியும். தகவல் தெரிவித்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்தில் ரத்தம் நம்மைத் தேடி வந்து விடும். ஒரு பாட்டில் ரத்தத்திற்கு ரூ. 450 வசூலிக்கப்படும். கூடுதலாக போக்குவரத்து செலவாக ரூ. 100 தர வேண்டும்.

Kokila

Next Post

அடிக்கடி டீ குடிக்கிற பழக்கம் உங்களுக்கு இருக்கா..? நாளடைவில் தற்கொலைக்கு தூண்டுமாம்..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி..!!

Tue Oct 10 , 2023
மக்களின் விருப்ப பானம் தேநீர். வீட்டில் இருந்தாலும் சரி.. பணிபுரியும் இடத்திலும் சரி தலைவலியோ, டென்க்ஷனோ ஏற்பட்டால் உடனே நமது உடல் தேடுவது ஒரு கப் சூடான டீ தான். டீ குடித்த சில நிமிடங்களில் ஏற்படும் புத்துணர்ச்சி அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் சிறிது நேரம் நம்மை ஆறுதல் படுத்திவிடும். அத்தகைய டீ குறித்து, அடிக்கடி ஏதேனும் ஓர் ஆய்வு முடிவு வந்து டீ பிரியர்களை அச்சுறுத்தும். ஆனால், சமீபத்தில் […]

You May Like