மக்களே…! இந்தியாவில் நுழைந்தது கொரோனா XBB.1.5 மாறுபாடு…! எல்லாம் அலர்ட்

அமெரிக்காவில்‌ இருந்து ராஜஸ்தான்‌ வந்தவருக்கு ஒமிக்ரான்‌ XBB.1.5 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில்‌ அதிக நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொற்று இந்தியாவில்‌ முதல்‌ முறையாக உறுதியாகியுள்ளது.


ஜெய்ப்பூர் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் விஜய் ஃபவுஜ்தார் கூறுகையில், டிசம்பர் 19 அன்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு டிசம்பர் 22 அன்று காய்ச்சல் இருந்தது, பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. “நேற்று வந்த மரபணு வரிசைமுறை அறிக்கையில் XBB.1.5 என்ற புதிய மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளது” என்று கூறினார்.

இந்த மாறுபாடு சீனாவுடன் எங்கும் இணைக்கப்படவில்லை என்றார். நோயாளி ஆரோக்கியமாக உள்ளார் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உறவினர்கள் மற்றும் அவர் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகளை எடுக்க மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அசத்தல்...! போட்டி தேர்வுக்கு தயாராகும் அவர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை...! முழு விவரம் உள்ளே...

Thu Jan 5 , 2023
இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் பசுமை வழிச்சாலையில் “காஞ்சி” வளாகத்தில் இயங்கி வருகிறது. ஆர்வலர்கள் தங்குவதற்கு அறைகளும், கட்டணமின்றி உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. 25,000 நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றும் இப்பயிற்சி மையத்தில் அமைந்துள்ளது. செப்டம்பர் 2022-இல் மத்திய தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வின் இறுதி முடிவு 06.12.2022 அன்று வெளியிடப்பட்டது. இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 19 […]
Money 1

You May Like