மத்திய அரசில் உள்ள காலி பணியிடங்கள்… விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்…!

Central 2025

மத்திய பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடங்களுக்கான 13-வது கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.


மத்திய பணியாளர் தேர்வாணையம் “காலி பணியிடங்கள் 2025”-க்கான 13-வது கட்ட தேர்வு குறித்த அறிவிப்பை 02.06.2025-ம் தேதி வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள மத்திய அரசின் அமைச்சகங்கள்,துறைகள், அமைப்புகளால் அறிவிக்கப்படும் பல்வேறு காலி பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை வெளிப்படையான முறையில் ஆணையம் நடத்துகிறது.

பதவி, வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் https://ssc.gov.in அல்லது mySSC மொபைல் செயலி மூலம் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 24.06.2025 ஆகும்.

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை (உத்தேசமாக) 24 மையங்கள்/நகரங்களில் நடைபெறும்: ஆந்திராவில் 12 மையங்களிலும், புதுச்சேரியில் 01 மையத்திலும், தமிழ்நாட்டில் 08 மையங்களிலும், தெலுங்கானாவில் 03 மையங்களிலும் இந்த தேர்வுகள் நடைபெறும்.

Read more: மழை, வெள்ளம் வந்தாலும் பார்க்க மாட்டோம்; நக்சல்களுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை!

Vignesh

Next Post

அடுத்த பிளான் இதுதான்!. ஈரானில் ஆட்சி கவிழ்ப்பு?. அதிபர் டிரம்ப் சூசக அறிவிப்பு!

Mon Jun 23 , 2025
ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில், எந்தவொரு நாட்டிலும் எளிதாக ஆட்சி கவிழ்ப்பை அமெரிக்காவால் எளிதாக செய்ய முடியும் என்று அதிபர் டிரம்ப் சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த […]
iranian regime change trump 11zon

You May Like