நிர்வாகிகளிடம் உறுதியாக சொன்ன விஜய்..!! தமிழ்நாடு முழுவதும் பயணம்..!! காத்திருக்கும் தரமான சம்பவம்..!!

நடிகர் விஜய் அரசியலில் நுழைய உள்ளது தான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அவர், எப்போது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றன. அவர் அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், அதற்கான பணிகளை சைலண்டாக செய்துகொண்டு தான் இருக்கிறார். தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் அரசியல் வருகை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.


அந்தவகையில், சென்னை பனையூரில் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற மீட்டிங்கில் தான் அரசியலுக்கு வந்துவிட்டால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என கூறினாராம் விஜய். முதன்முறையாக நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து ஓப்பனாக பேசி உள்ளதால், அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் குஷியாகி உள்ளனர். இன்றும் விஜய் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய்யின் மற்றொரு திட்டம் அனைவருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக உள்ளது. அது என்னவென்றால், நடிகர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளாராம். அதுவும் லியோ பட ரிலீசுக்கு முன்னரே அவர் இந்த பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மக்களை நேரடியாக சந்தித்து தனது அரசியல் என்ட்ரியை அறிவிக்கவே விஜய் இந்த பிளானை போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லியோ பட இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ள விஜய், அந்த சமயத்தில் இந்த பாத யாத்திரையை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. விஜய் இப்படி அரசியல் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வதை பார்த்தால் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள தளபதி 68 தான் அவரின் கடைசி படமாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியானதுபோல் தெரிகிறது.

CHELLA

Next Post

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கே 2 ஆண்டுகள் சிறை..!! செந்தில் பாலாஜி வழக்கில் செம ட்விஸ்ட்..!!

Wed Jul 12 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை எதிர்த்து, அவரது மனைவி மேகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் சொலிஜிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். கடந்த 2000ஆம் ஆண்டு வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால், உலகளவில் நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் […]
WhatsApp Image 2022 11 28 at 2.49.04 PM1

You May Like