இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரங்கள் எப்படி இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்று தமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 24,683 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்த நிலையில், 90.57% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 11,470 மாணவிகளும், 10,886 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5.01லட்சம் மாணவர்களும், 4.75 லட்சம் மாணவிகளும் தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர். இந்த நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல மாணவ மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளை tnresults.nic.in,dge.tn.gov.in உள்ளிட்ட இணையதள முகவரியின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.