மத்திய அரசு மின் விநியோக நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி..!! செம அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!! 

job 2

மத்திய அரசின் மின் விநியோக நிறுவனம் பவர்கிரிட் கார்பரேஷன் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் மொத்தம் 1,149 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 49 இடங்கள் உள்ளன.


தமிழ்நாடு காலிப்பணியிட விவரம்:

டிப்ளமோ (சிவில்) – 2
டிப்ளமோ (எலெக்ட்ரிக்கல்) – 15
பட்டப்படிப்பு (எலெக்ட்ரிக்கல்) – 15
பட்டப்படிப்பு (சிவில்) – 2
ஐடிஐ (எலெக்ட்ரிஷியன்) – 15

வயது வரம்பு: இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

என்னென்ன தகுதி:

  • ஐடிஐ தகுதிக்கு அதற்கான முழு நேர கல்வியை பெற்றிருக்க வேண்டும்.
  • டிப்ளமோ தகுதிக்கு அந்தந்த பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்கு சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கலில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
  • பட்டப்படிப்பு தகுதிக்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பொறியியலில் 4 வருட டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்பயிற்சி உதவித்தொகை:

  • பட்டப்படிப்பு தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.17,500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • டிப்ளமோ தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும்.
  • ஐடிஐ தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.13,500 உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களில் இருந்து கல்வித் தகுதி மற்றும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். தகுதியானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Document Verification) அழைக்கப்படுவார்கள்.

சேர்வதற்கான நிபந்தனைகள்: சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், மருத்துவ சான்றிதழ் (Medical Fitness Certificate), காவல்துறை சான்றிதழ் (Police Verification Certificate) வழங்கிய பின் தொழிற்பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்கள் முதலில் அரசு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஐடிஐ தகுதி பெற்ரவர்கள் https://apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்திலும், டிகிரி மற்றும் டிப்ளமோ தகுதி பெற்றவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.

அதனைத்தொடர்ந்து, https://www.powergrid.in/en/rolling-advertisement-for-enagagement-of-apprentices என்ற இணைப்பில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6 வரை விண்ணப்பிக்கலாம்

Read more: ஒரு முறை சார்ஜ் செய்தால் 370 கி.மீ பயணிக்கலாம்.. புதிய அம்சத்துடன் டாடா நெக்ஸான் EV! விவரம் உள்ளே..

English Summary

Vocational training with incentives in the Central Government Electricity Distribution Company..!!

Next Post

நடிகர் விஜய்யை கூட விட்டு வைக்கல..!! பல ஆண்களுடன் பழக்கம்..!! ஜாய் கிரிஸில்டாவின் முகத்திரையை கிழித்த பாடகி சுசித்ரா..!!

Thu Sep 18 , 2025
‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது சமையல் துறையில் முன்னணி தொழிலதிபராக இருந்து வருகிறார். விஐபிக்களின் திருமணங்களில் உணவு சமைப்பதில் இவரது தொழில் பிரபலமானது. இதையடுத்து, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், சமீப காலமாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏற்கனவே திருமணமாகி […]
Madhampatty Rangaraj 2025

You May Like