சிவாஜி மகன் மற்றும் பேரனுக்கு பிடிவாரண்ட்!!! கரணம் என்ன?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த்தும் அவரது மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றனர். இவர்கள் மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக நடவடிக்கைக்காக தொடர்பு வைத்துள்ளனர்.


இந்நிலையில் வியாபார நடவடிக்கைக்காக துஷ்யந்த் சார்பாக மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ.15 லட்சத்திற்கான 2 காசோலை கடந்த 2019-ம் ஆண்டு அளித்ததாகவும், ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் காசோலைகள் இரண்டுமே திருப்பி அனுப்பப்பட்டன, இது தொடர்பாக துஷ்யந்த் மீது புகார் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக பணத்தை தருவதாக ராம் குமார் வாக்குறுதி அளித்துள்ளார்.

ram kumar sivaji

ஆனால் அவரும் கூறியபடி பணத்தை திருப்பி தராத காரணத்தால் அவர்கள் மீது வழக்கு பதியபட்டது. இந்த வழக்கை சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி, தந்தை ராம்குமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை நீதிபதிகள் பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

Newsnation_Admin

Next Post

ஒரே ஆதாரை வைத்து எத்தனை மின் இணைப்பை இணைக்கலாம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்...

Tue Nov 29 , 2022
ஒருவர், ஒரு ஆதார் வைத்து 10 மின் இணைப்புகளுடன் இணைக்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாருடன் மின் இணைப்பு குறித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார், அப்போது பேசிய அவர், “பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய […]
மின் கட்டண முறையில் அதிரடி மாற்றம்..!! அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு..!!

You May Like