“உங்களைப் போல் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றது நாங்கள் அல்ல..” செந்தில் பாலாஜியை சாடிய பிரேமலதா விஜயகாந்த்..! என்ன நடந்தது..?

premalatha senthil balaji

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர்,” இன்று காலை காவல்துறையினர் கட்சி கொடிகளை எல்லாம் அகற்ற சொல்லி இடையூறுகளை ஏற்படுத்தியதாக கட்சியினர் கூறினார்கள்.


நான் போகும் இடமெல்லாம் தேமுதிகவிற்கு மக்களும் காவல்துறையினரும் பக்கபலமாக உள்ளார்கள். ஆனால் கோவையில் மட்டும் ஏன் இப்படி உள்ளது. கோவை மாவட்டத்திற்கு யார் பொறுப்பாளர் என்று கேள்வி எழுப்பினார். அப்பொழுது தொண்டர்கள் செந்தில் பாலாஜி என கோஷமிட்டனர்.

தேமுதிகவைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று என்னும் கூட்டம் அவர்கள் என்றும் யார் இடையூறு செய்தார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் போன்று லஞ்சம் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர்கள் நாங்கள் அல்ல என்று கடுமையாக சாடினார்.

மேலும், தேமுதிக அங்கம் வகிக்காமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாது. அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள். காவல்துறையில் உள்ளவர்கள் கேப்டனின் உருவங்கள் தான். கேப்டனை பார்த்து தான் காவல்துறையிலும் ராணுவத்திலும் பலரும் இணைந்தார்கள். இதனை ராணுவத்தில் இருப்பவர்களே என்னிடம் கூறியுள்ளார்கள் என்றார்.

Read more: எடை குறையும்.. இதய நோய் வராமல் தடுக்கும்.. தினமும் 30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் இத்தனை நன்மைகளா..?

English Summary

“We are not the ones who went to jail for corruption like you..” Premalatha Vijayakanth slams Senthil Balaji..!

Next Post

Breaking : 12 மணி நேரத்தில் அடுத்த புயல்.. தமிழகம் நோக்கி நகரும்.. சென்னைக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட்!

Thu Nov 27 , 2025
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதும் ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் […]
heavy rain 2

You May Like