குடியிருப்பு பகுதியில் வித்தியாசமான சத்தம்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..

கரூர் அடுத்த வாங்கப்பாளையம் தீரன் நகரில் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் மரத்திலிருந்து ஒருவித சத்தம் வருவதை உணர்ந்து கவனித்துள்ளனர். அதில் பாம்பு ஒன்று அசைந்து கொண்டிருப்பது கண்டு அச்சம் அடைந்து கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர்.


கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு படையினர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தனர். மரத்தின் மேலிருந்த பாம்பை 15 நிமிடங்களுக்குள் லாவகமாக பிடித்து பத்திரமாக மீட்டனர். பின்னர் பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. குடியிருப்பு பகுதியில் மரத்தின் மீது பாம்பு ஊர்ந்து கொண்டிருந்த நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsnation_Admin

Next Post

மும்பையில் நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய அழகிய வீடு!

Tue Dec 27 , 2022
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற தனது சிறுவயது கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே அந்த வீட்டை தனது ரசனைக்கேற்றவாரு மாற்றியமைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் மொஹஞ்சதாரோ’ என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங் உடன் ‘சர்க்கஸ்’ என்ற படத்தில் […]
pooja 2

You May Like