சமூக ஊடகங்களில் வைரலான ஒரு காணொளியில், கணவன் மனைவியால் கொடூரமாக தாக்கப்படுவதை பார்க்க முடிகிறது.. அந்த நபர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளார். இந்த சூழலில் மனைவி தன்னை தாக்குவதை லேப்டாப்பில் பதிவு செய்துள்ளார்..
அந்த வீடியோவில் ஒரு வாக்குவாதத்தின் போது, ஒரு பெண் அவரை அறைவதும், அடிப்பதும், முடியைப் பிடித்து இழுப்பதும் தெரிகின்றன. அந்த வீடியோவை பகிர்ந்த பயனர், “கடந்த இரண்டு ஆண்டுகளாகத் துன்புறுத்தப்பட்ட பிறகு, என் சகோதரன் இந்தக் காட்சிகளைத் தன் மடிக்கணினியில் பதிவு செய்துள்ளான். திருமணம் செய்வதற்கு முன் இருமுறை யோசியுங்கள்” என்று தலைப்பிட்டிருந்தார். கவர்ச்சிகரமான அந்தத் தலைப்பும், காட்சிகளின் தன்மையும் சேர்ந்து, அந்தப் பதிவிற்கு உடனடியாகப் பலரின் கவனத்தை ஈர்த்தன.
இந்த வீடியோ விரைவில், ஆண்கள் சம்பந்தப்பட்ட குடும்ப வன்முறை குறித்த உரையாடல்களின் கவனத்தை ஈர்த்தது.
இணையவாசிகள் எப்படி எதிர்வினையாற்றினார்கள்?
அந்த வீடியோ விரைவில் அதிகப் பார்வைகளைப் பெற்றது. அதற்கான எதிர்வினைகள் புகார்கள் மற்றும் விமர்சனங்கள் கலந்ததாக இருந்தன. “திருமணம் மிகவும் பயமாக இருக்கிறது… நான் உண்மையிலேயே பயப்படுகிறேன்,” என்று ஒரு பயனர் கூறினார்.
“வேஸ்ட் பெங்கால் மற்றும் பெங்காலிப் பெண்களுக்கு என்னதான் ஆகிவிட்டது? தாங்கள் விரும்பும் எதையும் பெறுவதற்கு ஆண்களை ஒரு கருவியாக அவர்கள் நினைக்கிறார்கள். நீங்களே உங்கள் வேலையைச் செய்யுங்கள்,” என்று மற்றொரு பயனர் கூறினார்.
3வது பயார் “இது பெண்ணியம் அல்ல; இது தாலியுடன் கூடிய உள்நாட்டு பயங்கரவாதம். வெளிநாட்டு சகோதரர்களே: இந்தியத் திருமணங்களிலிருந்து விலகி இருங்கள். உங்கள் வாழ்க்கை அதைப் பொறுத்தது,” என்று மூன்றாவது இணையவாசி கூறினார்.
“இந்தப் பெண்ணைப் பாதுகாக்க அந்தப் பெண்ணியவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எங்கே!?” என்று நான்காவது பயனர் கூறினார்.
“இதனால்தான் நான் பெங்காலிப் பெண்களைத் தவிர்க்கிறேன். வீட்டில் இப்படிச் செய்வார்கள், வெளியே பலருடன் உறவு வைத்துக்கொள்வார்கள். நான் அவர்களை எங்கு, எப்போது பார்த்தாலும், தவறான பாதையில் செல்வதைத் தவிர்க்க அவர்களை முழுமையாகப் புறக்கணித்துவிடுவேன்,” என்று இன்னொரு பயனர் கூறினார்.



