முன்னதாக வேலூர் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா.. அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை வழிநடத்துவதைப் பார்த்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 25 சீட்டுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கிராமங்கள் எல்லாம் பாஜகவை கொண்டு சென்ற அண்ணாமலைக்கு பாராட்டுக்கள் என்று அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார்.
அண்ணாமலைக்கும் எல் முருகனுக்கும் உறவு நன்றாக இல்லை என்று கூறப்படும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அண்ணாமலையை அமித் ஷா பாராட்டிய நிலையில் மேடையில் எங்கும் எல் முருகன் இடம்பெறாதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூருக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார் அமித் ஷா. அவருடன் அண்ணாமலை சென்றார். தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சீங்க? ஸ்டாலின் சேலஞ்ஜ்.. ரூ.2.47 லட்சம் கோடி! வேலூரில் பதிலளித்த அமித்ஷா அதோடு அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், சுதாகர் ரெட்டி கூட ஹெலிகாப்டரில் இருந்தனர். ஆனால் எல் முருகன் இந்த பயணத்தில் இல்லை. அதனால், முருகன் எங்கே போனார்? என உளவுத்துறையும் பாஜக தரப்பும் நேற்று முழுவதும் வலைவீசித் தேடியிருக்கிறார்கள்.
அமித் ஷாவின் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழலில், சென்னையிலேயே இருந்த முருகன், தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போலீசாருக்கு தெரியாமல், தனது நண்பரின் காரில் ஏறி சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. சென்னையில் சில முக்கிய இடங்களுக்கு சென்றிருந்திருக்கிறார்.
நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லையாம் முருகன். இதனால் அதிர்ச்சியடைந்த மாநில உளவுத்துறை, முருகன் எங்கே போனார் ? என்று தேடியிருக்கிறது. ஆனாலும், கண்டுபிடிக்க முடியவில்லை. இதே போல, கமலாலய தரப்பும் முருகன் எங்கே போனார்? என விசாரித்து விசாரித்து டயர்டு ஆகி விட்டதாம்.
அவர் இடைப்பட்ட நேரத்தில் யாரைசந்தித்தார்.. யாருடன் பேசினார்.. என்ன பேசினார் என்பது பெரிய புதிராக உள்ளதாம்.