இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்..? டைம் ரொம்ப முக்கியம்..!! லேட்டா சாப்பிட்டால் என்ன ஆகும்..?

வேளைக்கு வேளை சாப்பிடுவது மட்டும் முக்கியமல்ல. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியமான உணவு முறையாகும். அதேசமயம் நீங்கள் உடல் எடை அதிகரிக்கிறதே என கவலைக்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் உணவு நேரமும் ஒரு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, இரவு உணவு சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம். ஆனால், பலரும் இரவில்தான் நினைத்த உணவை, அதிகம் சாப்பிடுகின்றனர். ஆனால், இரவு உணவை எப்போதும் சீக்கிரமே சாப்பிட்டுவிட வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால், பலர் நடு இரவில் எல்லாம், உணவை சாப்பிடுவார்கள். இது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை தரக்கூடும். சரி, இரவு உணவை எப்போதுதான் சாப்பிட வேண்டும்..? என இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

இரவு உணவு சாப்பிட சரியான நேரம் எது?

இதற்கான சரியான விடை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வேறுபடும் என்கின்றனர் வல்லுநர்கள். வயது, வாழ்க்கை முறை, நோய் அறிகுறிகள் ஆகியவற்றை பொருத்து அவர்களுடைய இரவு உணவு நேரம் மாறுபடலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஷிஃப்ட் முறைப்படி வேலை செய்கிறீர்கள். உங்களுக்கு இரவு ஷிஃப்ட் என்றால், உணவு முறை வேறு மாதிரியானதாக இருக்கும். ஆனால், மருத்துவர்கள் பொதுவான ரூல்ஸ் ஒன்றை வைத்திருக்கின்றனர். அதாவது எந்த நேரத்தில் சாப்பிடுவதாக இருந்தாலும் நீங்கள் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

ஆய்வுகள் என்ன சொல்கிறது..?

ஆய்வுகள் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. நமது மனித உயிரியல் கடிகாரத்தின் அடிப்படையில் பார்க்கப்போனால் இந்த நேரத்திற்குள்தான் இரவு உணவை முடித்துவிட வேண்டும். ஆனால், இந்த நேரத்தை பலராலும் கடைபிடிக்க முடியாது. எனவேதான் குறைந்தபட்சம் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும் என்கின்றனர். சாப்பிட்டு உடனே தூங்குவதால் நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை , செரிமான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.

Read More : தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!!

Chella

Next Post

கொத்தமல்லி-யை யாராவது காசு போட்டு வாங்குவாங்களா? - Blinkit CEO எடுத்த முடிவு!

Thu May 16 , 2024
இந்தியாவில் மிகப்பெரிய குவிக் காமர்ஸ் தளமாக இருக்கும் பிளிங்கிட் நிறுவனம், வாடிக்கையாளர்களின் காய்கறி ஆர்டர்களுடன் இலவசமாக கொத்தமல்லி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் எப்படி உருவானது என்பது தான் சுவாரஸ்யமான கதை. பிளிங்கிட் செயலியில் காய்கறிகள் ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளர், கொத்தமல்லிக்கு தனியாக பணம் செலுத்த வேண்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பொதுவாக காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கும்போது, இலவசமாக கொத்தமல்லி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், […]

You May Like