’கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடியா இருக்கே’..!! அஜித்தால் டென்ஷனான சீனியர் சிட்டிசன்..!!

கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடி இருந்தால் எப்படி என்று வடிவேலு புலம்புவார். அஜித்துக்கும் சொந்த வாழ்க்கையில் அப்படி ஒரு நிலைமைதான். அவர் என்ன செய்தாலும், அது கடைசியில சர்ச்சையில் தான் போய் முடியுது. நமக்கு எதுக்கு வம்பு என்று அமைதியா வீட்டில் இருந்தால் கூட, இவர் ஏன் அமைதியா இருக்கார்னு ஒரு 10 பேர் கூட்டம் போட்டு விவாதிக்கிறாங்க. அப்படி அசைபோடுற வாய்க்கு இன்னைக்கு அவல் கிடைத்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கு.

காலையில் இருந்து சமூக வலைதளம் பக்கம் சென்றாலே, ஒருவிரல் புரட்சி தான். ஒரு பக்கம் மக்களவைத் தேர்தலில் ஓட்டு போட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மற்றொரு பக்கம் ஓட்டு போட்டுவிட்டு கையில் வைத்திருக்கும் மையம் வந்துச்சு. ஒரு பத்து போட்டோ எடுத்து ஒரு விரல் புரட்சி என்று சொல்லிக்கொண்டு சமூக வலைத்தளத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். வழக்கம் போல விமான நட்சத்திரங்கள் ஓட்டு போடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. அதில், ஒரு சம்பவம் தான் வாக்களிக்க வந்தது. நடிகர் அஜித் இன்னைக்கு முதல் ஆளாக ஓட்டு போட 6.45 மணிக்கு எல்லாம் வாக்கு சாவடிக்கு போய்விட்டார்.

அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர் மற்றும் அவருடைய ரசிகர்கள் வானை பிளக்கும் அளவுக்கு சத்தம் போட்டு அவரை வரவேற்றனர். சத்தம் கேட்க முடியாமல் அஜித் காதுகளை மூடிக்கொள்ளும் அளவுக்கு அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது. இப்படி எல்லாம் ஆகிவிடக் கூடாது என்று தான் மனுஷன் விடிஞ்சதுமே ஓட்டு போட வந்திருக்கிறார். ஆனால், அதுக்கு முன்னாடியே அவருடைய வாக்குச்சாவடிக்கு அவருடைய ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.

வழக்கம் போல இது போன்ற நட்சத்திரங்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போலீசார் பார்த்துக் கொள்வார்கள். அப்படித்தான் அஜித் வந்ததுமே அவரை ஓட்டு போட உள்ளே அழைத்துச் சென்றனர். ஆனால், அஜித்துக்கு முன்னாடியே சீனியர் சிட்டிசன் ஒருவர் அந்த இடத்தில் இருந்திருக்கிறார். என்ன உள்ள அனுப்பாம, அஜித்தை மட்டும் ஏன் அனுப்புறீங்கன்னு அங்க இருந்த காவல்துறையினர் கிட்ட அவர் பயங்கரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Read More : உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி எங்கு இருக்கு தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்..!!

Chella

Next Post

'படம் எடுத்துவிட்டு எல்லாரிடமும் கெஞ்சனும்' படம் எடுப்பதையே நிறுத்திய சமுத்திரகனி.. இதுதான் காரணம்!

Fri Apr 19 , 2024
படம் எடுத்துவிட்டு அதனைக் கொண்டு போய் சேர்க்க வேண்டிய போராட்டம் இருப்பதை பார்த்து தான் படம் எடுப்பதை நிறுத்தி விட்டேன். மறைந்த இயக்குநர் பாலசந்தரின் பார்த்தாலே பரவசம் படத்திலும், அண்ணி சீரியலிலும்  உதவி இயக்குநராக பணியாற்றியவர் சமுத்திரகனி. தொடர்ந்து சில சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் இயக்கிய அவர் 2003 ஆம் ஆண்டு நடித்த உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து […]

You May Like