ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், புதிய கட்சி அலுவலகத்தின் திறப்பு விழாவுக்கு சென்றபோது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் திடீரென அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார். இதில், அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் அமைச்சரை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அதாவது, உதவி ஆய்வாளர் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வேலை வாங்கி தர வேண்டும் என்பதற்காக 3 முறை அமைச்சரை சந்தித்துள்ளார். ஆனால், அவருக்கு அமைச்சர் நபா கிஷோர் தாஸ், வேலை வாங்கி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் தான் அமைச்சரை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.