அமைச்சர் நபா கிஷோரை சுட்டுக் கொன்றது ஏன்..? கைதான காவலர் பரபரப்பு வாக்குமூலம்..!!

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், புதிய கட்சி அலுவலகத்தின் திறப்பு விழாவுக்கு சென்றபோது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் திடீரென அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார். இதில், அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் அமைச்சரை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை கூறியுள்ளார்.


அதாவது, உதவி ஆய்வாளர் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வேலை வாங்கி தர வேண்டும் என்பதற்காக 3 முறை அமைச்சரை சந்தித்துள்ளார். ஆனால், அவருக்கு அமைச்சர் நபா கிஷோர் தாஸ், வேலை வாங்கி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் தான் அமைச்சரை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

CHELLA

Next Post

அடேங்கப்பா..!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! 108 வேட்பாளர்களை களமிறக்கும் சங்கம்..!!

Tue Jan 31 , 2023
ஈரோடு இடைத்தேர்தலில் 108 வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் யார் என்பது […]
அடேங்கப்பா..!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! 108 வேட்பாளர்களை களமிறக்கும் சங்கம்..!!

You May Like