’43 வயதில் திருமணம் செய்தது ஏன்’..? முதல்முறையாக மனம் திறந்த நடிகை லாவண்யா..!!

திரைப்படங்கள் மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லாவண்யா, தனக்கு 43 வயதில் திருமணம் ஆனது பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை லாவண்யா, 1997ஆம் ஆண்டு வெளியான சூரிய வம்சம் திரைப்படத்தில் சொப்னா என்ற கேரக்டரில் அறிமுகம் ஆகி தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல், வெள்ளி திரையில் மட்டுமின்றி, பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும், இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததால் அதிகமாக ஜொலிக்க முடியாமல் போயிருக்கிறது.

லாவண்யா படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை உள்ளிட்ட பல பெரிய படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து பிரபலம் ஆகினார். பிறகு 2014ஆம் ஆண்டு பாலா படத்தில் தான் கடைசியாக லாவண்யா நடித்திருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், 10 வருடங்களுக்கு பிறகு இப்போது பகாசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு கடந்த வருடத்தில் திருமணம் ஆகியது.

இப்படியான நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியில் சில தகவல்களை பேசி இருக்கிறார். அதில் தான் 43 வயது வரைக்கும் திருமணம் செய்யாததற்கு காரணம் என்னுடைய குடும்ப சூழ்நிலைதான். எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாததால் அடுத்தது வேலைகளிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். என்னுடைய குடும்பத்தினரும் எனக்கு சப்போர்ட்டாக இருந்தனர். அந்த நேரத்தில் தான் நான் என்னுடைய கணவரை ஒரு திருமண பங்க்ஷனில் சந்தித்தேன்.

என்னுடைய குடும்ப நண்பர் மூலமாகத்தான் அவர் அறிமுகமானார். பிறகு நட்பாக தொடங்கிய எங்களுடைய பழக்கம், காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. எங்களுடைய காதல் வீட்டிற்கு தெரியவந்ததும் எல்லோரும் சம்மதம் தெரிவித்தனர். திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறேன். கல்யாணத்தைப் பொறுத்த வரைக்கும் இப்போது எல்லாம் முன்பு போல நிலைமை இல்லை. எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்களோ அந்த நேரத்தில் தானே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால் எனக்கும் 43 வயது திருமணம் பண்ணி இருக்கிறோமே என்ற வருத்தம் இல்லை. என்னுடைய கணவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்” என்றார்.

Read More : ஃபிளிப்கார்டில் ஐபோன் 15 மாடல் இவ்வளவு கம்மியா..!! அதிரடி சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Chella

Next Post

ஹிர்சுட்டிசம் அறிகுறியினால் ட்ரோல் செய்யப்படும் முதலிடம் பெற்ற மாணவி! இதன் அறிகுறிகள் மற்றும் காரணம் என்ன?

Mon Apr 22 , 2024
உத்தரப்பிரதேச மத்தியமிக் ஷிக்ஷா பரிஷத் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை ஏப்ரல் 20, 2024 அன்று வெளியானது. பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வில் பி ராச்சி நிகம் 98.5 சதவீதத்துடன் முதலிடம் பிடித்தார். அவரின் முக அம்சங்களை வைத்து சமூக வலைதளங்களில் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். ஹிர்சுட்டிசம் என்பது பெண்களின் முகம், மார்பு, முதுகு மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் பொதுவாக முடி இல்லாத அல்லது குறைவாக […]

You May Like