கடந்த சில மாதங்களாக டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காசியாபாத், பரிதாபாத், குர்கான் போன்ற பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம்..? பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி, சக்தி வெளியேற்றப்படும் போது, பூமியின் தளத்தட்டுகள் நகர்வதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது.. இதனை டெக்டோனிக் தட்டுக்கள் என்றும் அழைப்பர்.. பூமியின் டெக்டோனிக் தட்டுகளின் நகர்வு காரணமாக நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த தட்டுகள் மேலோடு எனப்படும் பூமியின் மேல் அடுக்குக்குள் ஆழமாக உள்ளன. பூமியின் மேற்பரப்பின் இரண்டு தொகுதிகள் ஒன்றுக்கொன்று எதிராக நகரும்போது, அது பூகம்பத்தை ஏற்படுத்துகிறது.
பூமியின் பல பகுதிகளிலும் அதிர்வுகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.. எனினும் அந்த அதிர்வுகள் ஓரிடத்தில் அதிகமானால் அது நிலநடுக்கம் என்று அழைக்கப்படுகிறது.. பூமியின் மேற்பரப்பு மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், ஆறுகள் ஆகியவை நிறைந்தது.. மேலும் கடினமான பாறைகள் காற்றாலும், ஆறுகளாலும் உடைக்கப்பட்டு மலையடிவாரங்களில் தட்டுக்களாக படிகின்றன.. இதே செயல்முறை ஆண்டுதோறும் நடப்பதால் டெக்டோனிக் தகடுகள் ஒன்றன் மீது ஒன்றாக படிகின்றன..

இந்தியாவில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது..? இந்தியாவின் வடக்குப் பகுதியில் இமயமலை அமைந்துள்ளது. மேலும் பூமிக்கு அடியில் இந்திய தட்டு, நேபாள தட்டு என இரண்டு தட்டுகள் இருக்கிறது..இமயமலை உருவாவதற்கு இந்த தட்டுகள் காரணம் என்று கூறப்படுகிறது.. இந்தியா மற்றும் நேபாளத்தின் இரண்டு பெரிய டெக்டோனிக் தகடுகள் அடிக்கடி மோதிக்கொள்வதால், டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் இரண்டு தட்டுகளும் மோதியதால், இந்தியா, நேபாளம் ஆகிய இரு நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது..