சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் செல்வ பிரகாசம்(27) இவருடைய மனைவி லாவண்யா (25) இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் மாங்காடு அடுத்துள்ள கெருகம்பக்கத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு சர்வேஸ்வரன்( 3) என்ற மகன் இருந்தார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சர்வேஸ்வரன் தன்னுடைய தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இத்தகைய நிலையில் தான் சென்னையில் இருந்து செல்வ பிரகாசம் கடந்த 2 நாட்களுக்கு முன்னால் கெருகம்பாக்கத்தில் இருக்கின்ற லாவண்யாவின் வீட்டிற்கு தன்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக சென்றார். ஆனால் பொது வீட்டில் லாவண்யா இல்லை இருந்தாலும் அக்கம்பக்கத்தினர் செல்வ பிரகாசத்தின் மகன் சர்பேஸ்வரன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ந்து போன செல்வ பிரகாசம் குழந்தை இறந்த தகவலை தனக்குத் தெரிவிக்காமல் குழந்தையை அடக்கம் செய்து விட்டதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதோடு வேறொரு நபருடன் மனைவி பழகி வருவதால் மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், குழந்தை சர்வேஸ்வரன் விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவம் பெற்று வீடு திரும்பிய நிலையில் மறுபடியும் சில நாட்களுக்கு முன்னால் மயக்கமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டது என்பதும் தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அடுத்த கட்டம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.