நண்பருடன் கொண்ட கள்ளக்காதலை கண்டித்த கணவண்.. கள்ளக்காதலனுடன் கணவரை கொன்று சாக்கடையில் வசிய மனைவி..! 

பெங்களூர் பகுதியில் உள்ள சோமஷெட்டிஹள்ளியில் தாசேகவுடா (48) என்பவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன்(40) அங்கு இருக்கும் பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். சென்ற மாதம் 28ம் தேதி அன்று கணவரை காணவில்லை என மனைவி காவல்துறையில் புகாரை அளித்துள்ளார். 


இந்த நிலையில் காவல்துறையினர் தாசேகவுடாவை தேடி வந்த நிலையில், நேற்றைய தினத்தில் ராம்நகர் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் சாக்கடை ஒன்றில் தாசேகவுடா பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடும்பத்தினரிடம் விசாரித்ததில், மனைவி ஜெயலட்சுமி மீது சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்மை சம்பவம் வெளிப்பட்டது. 

விசாரணையில் மனைவி ஜெயலட்சுமிக்கும், அவரது நண்பர் ராஜேசுக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது.இதனை கணவர் கண்டித்து கேட்டதால் அவரை கடந்த, 27ம் தேதி இரவு, பண்ணை வீட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை, ராம்நகர் அருகே இருக்கும் சாக்கடையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை கணவரை காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மனைவி, கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

FIFA World Cup Qatar 2022..!! அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது அர்ஜென்டினா..!!

Thu Dec 1 , 2022
கத்தார் கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் காலியிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நேற்றிரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டிகளில் ’டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள டுனிசியா பிரான்ஸ் அணியுடனும், ஆஸ்திரேலியா டென்மார்க் அணியுடனும் பலப்பரீட்சை நடத்தியது. இதில், கத்தாரில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் – டுனிசியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் டுனிசிய வீரர் வகாபி காஸ்ரி […]
FIFA World Cup Qatar 2022..!! அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது அர்ஜென்டினா..!!

You May Like