பக்க வாதத்தில் பாதிக்கப்பட்ட மனைவி.. கணவர் செய்த கொடூரம்..!

பெங்களூர் மாநகர பகுதியில் துரஹள்ளியில் விஸ்வநாத் என்பவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில், செக்யூரிட்டியாக சங்கரப்பா, 60 என்பவர் தனது மனைவி சிவம்மாவுடன் (50) வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவம்மா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு , நடக்க முடியாமல், படுத்த படுக்கையில் உள்ளார். இதனால் கணவர் பெரும் வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தைய தினத்தில் , மதிய நேரத்தில் மகன் கடைக்கு சென்றிருந்த நிலையில், மகளும் பணிக்கு சென்றுள்ளார். 

இந்த தருணத்தையே எதிர்பார்த்து காத்திருந்த கணவர், மனைவியை தண்ணீர் நிரம்பியிருந்த ஆழமான பகுதிக்கு துாக்கி சென்றுள்ளார். அந்த ஆழமான பகுதியில் வீசி கொலை செய்துள்ளார். பிறகு சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மகன், தாயை காணவில்லை என தந்தையிடம் கேட்டுள்ளார்.

எனக்கு தெரியாது என்று பொய் கூறிவிட்டு தப்பியோடி விட்டார். இதனையடுத்து மகன் எல்லா இடங்களிலும் தேடிய போது, தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் தாயின் உடல் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய சங்கரப்பாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#ஈரோடு :கல்யாணம் முடித்த கையோடு தேர்வு எழுத சென்ற புதுப்பெண்..!

Tue Dec 6 , 2022
ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள அந்தியூரில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் தேர்வு நடைபெற்றதில் சுமார் 1100 பேர் தேர்வு எழுதியுள்ளனர் . இந்த நிலையில் அதே மாவட்டத்தை சேர்ந்த வரதநல்லூரில் வசிக்கும் பட்டதாரியான ஹரிணி(24) என்ற பெண்ணிற்கும் வினோத் என்பவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து கிராம உதவியாளர் தேர்வுக்கு ஹரிணி விண்ணப்பித்திருந்தார். மேலும் தான் தேர்வு எழுத விரும்புவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார்.அதற்கு சிறிதும் தயங்காமல் […]
Screenshot 2022 12 06 09 28 08 22 a71c66a550bc09ef2792e9ddf4b16f7a

You May Like