இப்படியும் ஹோலி பண்டிகை கொண்டாடுவார்களா..? கற்களை தூக்கி அடித்து கோலாகல கொண்டாட்டம்..!!

ராஜஸ்தானில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொள்ளும் வினோத ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை என்றாலே வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி வாழ்த்துகளை தெரிவித்து கொள்வர். ஆனால், சில இடங்களில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொள்ளும் விநோத நிகழ்வும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் அருகே பிலுடா கிராமத்தில் தான் அந்த வினோத ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.


ஊரின் மையப்பகுதியில் திரண்ட இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களால் தாக்கி கொண்டு ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்த வினோத ஹோலி கொண்டாட்டத்தை ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது. கல் எறியும் ஹோலியில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

CHELLA

Next Post

கள்ள நோட்டு தொடர்பாக ரெய்டு நடத்தச் சென்ற காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..! சட்டீஸ்கரில் பரபரப்பு……!

Wed Mar 8 , 2023
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் உஸ்லாப்பூரை சேர்ந்தவர் பவன் சிங் தாகூர் இவர் சதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் சதியின் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தன்னுடைய மகளுடன் பேசுவதில்லை. பவன்சிங், சதி உள்ளிட்ட இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றன. பவன் சிங்குக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு, மட்டுமல்லாமல் பவன் சிங் […]
Chattisgarh murder

You May Like