Alert..! 40 கிமீ வேகத்தில் காற்று… கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டத்தில் இன்று கனமழை…!

rain 1

தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்கிறீர்களா?. ஹார்ட் அட்டாக், பக்கவாதம் அதிகரிக்கும் ஆபத்து!. ஆய்வில் அதிர்ச்சி!

Fri Sep 12 , 2025
அதிகாலையில் எழுந்திருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் இரவு வெகுநேரம் வரை விழித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, அதிகாலையில் எழுந்திருப்பது மிகவும் கடினமாகி வருகிறது. பலர் காலையில் எழுந்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளதால், இதற்காக அவர்கள் தங்கள் தொலைபேசிகளிலோ அல்லது கடிகாரங்களிலோ அலாரங்களை வைக்கிறார்கள். ஆனால் பல நேரங்களில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது இந்த அலார சத்தம் கேட்பதில்லை. இதனால் எழுந்திருப்பது தாமதமாகும். […]
alarm sleep 11zon

You May Like