உத்தரப்பிரதேச மாநிலம் மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு திருமணம் செய்வதற்கு அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது திருமணத்திற்கு ஒரு நாள் முன்னர் அந்த இளம் பெண் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதற்கான திட்டத்தை வகுத்து அதன்படி செயல்பட்ட அந்த பெண்மணி, அந்த பெண்ணின் காதலனுடன் அந்த பெண்ணின் உறவினர் ஒருவருடன் அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்தனர். பின்பு உறவினர்கள் சிலரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் 3 பேரும் தப்பி சென்றனர்.
இந்த நிலையில், மணமகள் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஒரு லாரியில் அந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த முகத்தில் அந்தப் பெண் தப்பிச் செல்வதற்கு உதவி செய்த உறவினர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த 3 பேரின் உறவுகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.