ஆன்லைன் திரைப்பட விமர்சன மோசடியில் ரூ.76 லட்சத்தை இழந்த பெண்.. என்ன நடந்தது..?

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதுன வழிகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றி பணத்தை திருடி வருகின்றனர்.. எனவே பொதுமக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.. பகுதி நேர வேலையாக திரைப்படங்களைப் பார்த்து விமர்சனம் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி இந்த மோசடி நடைபெறுகிறது..


ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள எம்என்சி நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணிபுரியும் திவ்யா என்ற பெண் இந்த மோசடியில் சிக்கி ரூ.76 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.. வெவ்வேறு திரைப்படங்களைப் பார்த்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற பகுதி நேர வேலையில் சேர்ந்த அவர், ஆன்லைனில் ரூ. 76 லட்சத்திற்கும் மேலாக இழந்தார்.

223720 cybercrime

பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் “ மீரா என்ற பெண் டெலிகிராமில் தனக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு குறித்து செய்தி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.. அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் தேஜஸ்வி என்ற மற்றொரு பெண் எனக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பத் தொடங்கினார். இந்த பகுதி நேர வேலையானது Bitmaxfilm.com செயலியில் திரைப்படங்களை மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது என்றும், கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக பதிவு செய்து மதிப்பீட்டைத் தொடங்குமாறும் தேஜஸ்வி என்னிடம் தெரிவித்தார்.

“ஒவ்வொரு நாளும் ஒரு செட் திரைப்படங்களையாவது முடிக்க வேண்டும் தேஜஸ்வி என்னிடம் கூறினார். ஒவ்வொரு செட்டிலும் 28 திரைப்படங்கள் மதிப்பிடப்பட வேண்டும். மதிப்பீட்டைத் தொடங்க, கணக்கிற்கு ரூ. 10,500 ரீசார்ஜ் செய்ய வேண்டும்.. ஒரு செட் படங்களின் மதிப்பீடு முடிந்தவுடன் எனது பணத்தை எடுக்கலாம் என்று என்னிடம் கூறப்பட்டது.

நான் Bitmaxfilm.com இல் ஒரு கணக்கை உருவாக்கி பல முறை பணத்தை டெபாசிட் செய்தேன்.. டிக்கெட்டுகளை ரேட்டிங் செய்யும் போது, எனக்கு ஒரு பிரீமியம் டிக்கெட் கிடைத்திருப்பதாகவும், இந்த பிரீமியம் டிக்கெட்டுக்கு நான் நெகட்டிவ் பேலன்ஸை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், நெகட்டிவ் பேலன்ஸ் செலுத்தவில்லை என்றால், என்னால் மதிப்பீட்டை முடியாது என்றும் மெசேஜ் வந்தது.

202201151515560549 Tamil News Tamil News Massive cyberattack hits Ukrainian government SECVPF

நான் முதலில் ரூ.29,500, பிறகு ரூ.82,541 டெபாசிட் செய்தேன். லெவல் அதிகரித்துள்ளதால் 30 டிக்கெட்டுகளை முடிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். அது மீண்டும் 5,48,658 நெகட்டிவ் பேலன்ஸ் காட்டியது. பின்னர் ரூ.9,59,357 டெபாசிட் செய்யும்படி மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் பின்னர், நான் 8 ஆம் நிலையை அடைந்துவிட்டதாக என்னிடம் கூறப்பட்டது, மேலும் நான் 35 டிக்கெட்டுகளை முடிக்க வேண்டியிருந்தது..

பரிவர்த்தனையை முடித்தவுடன் அனைத்து டெபாசிட்களையும் திரும்பப் பெறலாம் என்று உறுதியளித்தனர்.. ரூ.21,23,765 டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், பயன்பாட்டின் கணக்கில் மொத்தம் ரூ.76,84,493 டெபாசிட் செய்த பிறகு, எனது பணத்தை டெபாசிட் செய்ய முடியவில்லை. அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டதை கண்டுபிடித்தேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஐபிசியின் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66-டி ஆகியவற்றின் கீழ் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆன்லைன் மோசடிகளில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனில் முன்கூட்டியே பணத்தை டெபாசிட் செய்யும்படி கேட்கும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.. அத்தகைய வேலை வாய்ப்புகளை வழங்கும் எந்தவொரு நிறுவனம் அல்லது தனிநபரையும் முழுமையாக ஆய்வு செய்வது அவசியம்..

1newsnationuser1

Next Post

17 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்ற 4 இளைஞர்கள் அதிரடி கைது…..! கடலூர் அருகே பரபரப்பு…..!

Thu Apr 6 , 2023
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் திருமாவளவன் (24) பொறியாளரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கடலூர் முதுநகரை சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதான மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், திருமாவளவன் அவருடைய நண்பர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த ரங்கராஜ் (24), கடலூர் கோதண்ட ராமபுரத்தை சேர்ந்த அஜய் (22), செல்லாங்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ் (24) உள்ளிட்ட […]
கேரளாவில் மீண்டும் ஒரு பயங்கரம்..!! சிறார்களை வைத்து நரபலி பூஜை..?? சிக்கிய பெண் சாமியார்..!!

You May Like