Womens Day 2024: தடைவிதிப்போரின் தாடை உடைத்து புறப்படு!… தைரியம் விதைப்போரின் தடம்பார்த்து நடையிடு பெண்ணே!

Womens Day 2024: ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்தவகையில் இந்த வருடத்தின் ’பெண்களில் முதலீடு செய்க’கருப்பொருளுடன், இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது என்பதை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.

உலகின் அதிசயம் மனித இனம் என்றால் பிரபஞ்சத்தின் அதிசயம் பெண் இனம். மென்மையும், வலிமையும் ஒருங்கே காணப்படும் ஒரு படைப்பு. என்ன தான் படைப்பில் அனைவரும் சமம் என்றாலும் பெரும்பாலான உலக சமூகம் பெண்களுக்கு சமமான இடத்தை வழங்கவில்லை. ஆனால் சமூகம் அவளுக்கு சமமான இடத்தை வழங்கினாலும், வழங்காவிட்டாலும் அவளுக்கு ஆணை விட உயர்ந்த இடத்தையே இயற்க்கை வழங்கி உள்ளது.

ஒரு தாய் தந்தையருக்கு ஒரே நேரத்தில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு, தாய் தந்தையரால் ஒரே மாதிரி வாழ்க்கை தரத்தை வழங்கி விட முடியும். ஆனால், ஒரே மாதிரி வாழ்க்கை சூழலை வழங்க முடியாது. குழந்தை பருவத்தில் பெண் குழந்தைகள் தங்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப அல்லது சமூக சூழலுக்கு ஏற்ப வளர்க்கப் படுகிறார்கள், அல்லது வளர்கிறார்கள்.

சில குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை எந்த தெருவில்,எந்த ஊரில், அல்லது எந்த நாட்டில் இருந்தாலும் இப்படித்தான் வளர வேண்டும் என்ற நியதிகளுடன் வளர்க்கிறார்கள். ஆனால், சில குடும்பங்கள் வாழ்க்கைக்கு தேவையான நியதிகளை மட்டும் கற்றுக் கொடுத்துவிட்டு அன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப பெண் குழந்தைகள் வளர விடுகிறார்கள். அந்த பெண் குழந்தைகள் சூழலுக்கு ஏற்ப அறிவை ,உணர்வை பிரதிபலிக்கும் சுதந்திரத்துடன் வளர்க்கிறார்கள்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற கேட்ட நிலையெல்லாம் கடந்து, இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களுக்கே சவால் விடும் பணிகளில் கோலோச்சி வருகிறார்கள். இன்று பெண்கள் தொடாத உயரம் இல்லை, எட்டாத உச்சம் இல்லை. பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளை உலக மகளிர் தினமாக ஐ.நா அங்கீகரித்தது. அதன்படி இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனர்.

சர்வதேச மகளிர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? பாலின பாகுபாடு சம்பந்தமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை அனைவரது கவனத்திலும் கொண்டு வருவதே இந்நாளின் நோக்கம். ஆண்களுக்கு நிகரான ஊதியம், படிப்பு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் போன்ற பல்வேறு விஷயங்களில் பெண்கள் சந்தித்து வரும் சவால்களையும் வேறுபாடுகளையும் இந்த நாள் பறைசாற்றுகிறது.

அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெண்களிடையே ஒற்றுமையையும், தோழமையையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து, சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை அடையும் பொருட்டு அவர்களது கூட்டு வலிமையை கொண்டாடுவதற்கு அனைவரையும் ஒன்றிணைக்கிறது. மிக முக்கியமாக பெண்களின் சாதனைகளை கொண்டாடவும், உலகில் நிலவிவரும் சமத்துவமின்மைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலத்தை அமைக்கும் பொருட்டு வாதிடுவதற்கான ஒரு தளமாக அமைகிறது.

சர்வதேச மகளிர் தினம் 2024 இன் கருப்பொருளானது பெண்களில் முதலீடு செய்க: முன்னேற்றத்தை விரைவுப்படுத்துக (Invest in Women: Accelerate Progress,’ targeting economic disempowerment) என்பதாகும். இது பொருளாதார வலுவற்ற நிலையைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1975-ஆம் ஆண்டில் யுனைடெட் நேஷன்ஸ் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. எனினும் இந்த நாள் முதல்முறையாக யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 1911 இல் கொண்டாடப்பட்டது.

1908 ஆம் ஆண்டில் கார்மெண்ட்ஸில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் நியூயார்க் நகர தெருக்களில் நடந்து நல்ல ஊதியம், குறைவான வேலை நேரம் மற்றும் ஓட்டு போடும் உரிமைக்காக போராடினர். இதுவே சர்வதேச மகளிர் தினத்திற்கான ஒரு அடிப்படை யோசனையாக அமைந்தது. இந்தப் போராட்டத்தை அமெரிக்காவை சேர்ந்த சோசியலிஸ்ட் கட்சி வழி நடத்தியது.

Readmore: இந்தியாவின் ரூ.1 இங்கு ரூ.500க்கு சமம்!… 1000 ரூபாயில் கோடீஸ்வரர் ஆகலாம்!… எந்த நாட்டில் தெரியுமா?

Kokila

Next Post

Ration: பணியில் கண்ணுங்கருத்தமாக இருக்கவேண்டும்!… புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்கவேண்டும்!… அமைச்சர் உத்தரவு!

Fri Mar 8 , 2024
Ration: புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்களின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களையும் கடைக்கு வந்து தான் கைவிரல் ரேகைப் பதிவு […]

You May Like