தீபாவளி பரிசாக 2 இலவச எல்பிஜி சிலிண்ர்கள் , சி என் ஜி , பி என் ஜி மீதான வாட் வரியில் 10 சதவீதம் குறைப்பு என அதிரடியாக தீபாவளிப் பரிசுகளை அரசு வழங்கியுள்ளது.
குஜராத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 2 சமையல் எரிவாயு சிலிண்ர்கள் வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில்இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசு 10 சதவீதம் குறைத்துள்ளது. சிஎன் ஜி மீதான வரியை குறைக்கும் நடவடிக்கையால் 14 லட்சம் வாகன உரிமையாளர்கள் பயன்பெற உள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 38 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டரை இத்திட்டத்தின் கீழ் பெற முடியும்.
சிஎன்ஜி மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீது உள்ள மதிப்பு கூட்டு வரி அல்லது வாட் வரி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் இனி ஒரு கிலோ ரூ.7 என்ற வகையில் கனமீட்டருக்கு இயற்கை எரியாவு ரூ6 என்ற வகையில் குறைக்கப்பட்டுள்ளது மக்களின் பாதி பாரம் குறைந்தது போல் உள்ளது.
பண்டிகைக் காலங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் தீபாவளி பலகாரங்கள் செய்வார்கள். எனவே அவர்களின் சுமையை குறைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களால் மக்கள் மகிழ்ந்துள்ளனர். இரண்டு எல்பிஜி சிலிண்டர்களால் செலவில் ரூ.1600 பிடித்தம் செய்யமுடியும். எரிவாயுவில் 150 ரூ வரை சேமிக்க முடியும். எனவே அதை வேறு செலவுக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாட்வரி குறைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ.1650 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநில கலவி அமைச்சரும் செய்தித் தொடர்பாளருமான ஜிது இது குடிமக்களுக்கான தீபாவளி பரிசு என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிலிண்டர்களுக்கான பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.