பாம்புகள் பூமியில் உள்ள மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 81,000 முதல் 138,000 பேர் பாம்புக் கடியின் விளைவாக இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.. அந்த வகையில் இணையத்தில் வைரலாகி வரும் பாம்பு தொடர்பான நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஒரு பெண்ணின் காதில் பாம்பு சிக்குவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மஞ்சள் நிற பாம்பு ஒரு பெண்ணின் காதில் ஆழமாக சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. கையில் கையுறைகளை அணிந்து கொண்டு ஒரு கிளிப்பைப் பயன்படுத்தி ஒரு மருத்துவர் காதில் இருந்து பாம்பை வெளியே எடுக்க முயற்சிப்பதை பார்க்க முடிகிறது.
வீடியோ லிங்க் இதோ.. https://www.facebook.com/100078698452814/videos/3118940928417494/?t=227
ஆனால் எல்லா முயற்சிகளும் வீணாகிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்த பெண்ணின் காதிலிருந்து பாம்பு எடுக்கப்பட்டதா இல்லையா என்பது கேள்விக்குறியுடன் முடிந்தது. முழுமையடையாத முடிவு நெட்டிசன்களை ஏமாற்றமடைய செய்தது.. இதனால் முழு வீடியோவை போடும் படி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..