fbpx

படுக்கையில் சிறுநீர் கழித்த காதலன் ஆத்திரமடைந்த காதலி….! இறுதியில் காதலனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை….!

முன்பெல்லாம் காதலிக்கும் பெண்கள் ஆண்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.ஆனால் தற்சமயம் அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. தற்போது காதலிக்கும் ஆண்கள் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போல தெரிகிறது.

அமெரிக்கா நாட்டின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசித்து வருபவர் ப்ரியானா லாகோஸ்ட் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார். இந்த இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட சூழ்நிலையில் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று சென்ற வாரம் 2 பேரும் முடிவு செய்தனர்.

ஆனால் அதற்கு முன்பாக பார்ட்டி செய்யலாம் என்று சென்ற 13ஆம் தேதி வெளியே சென்று இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு வீடு திரும்பி இருக்கின்றனர். இருவரும் இரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது பிரியானாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, மதுபோதையிலிருந்த அவருடைய காதலன் இருவரும் ஒன்றாக படுத்திருந்த படுக்கையிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.

காலை எழுந்தவுடன் இந்த சம்பவத்தை கண்ட காதலி பிரியானா கோபம் அடைந்து தன்னுடைய காதலனை அடிக்க தொடங்கியுள்ளார். உறங்கிக் கொண்டிருந்த அந்த காதலன் அடி வாங்கிக் கொண்டே விழித்த சூழ்நிலையில், படுக்கையிலிருந்து எழுந்து வெளியே ஓடிச் சென்றார். ஆனால் ப்ரியானா சமையலறைக்கு சென்று, கத்தியை எடுத்து வந்து அந்த இளைஞரை குத்தி இருக்கிறார்.

இதில் அந்த நபரின் நுரையீரல் பகுதியில் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பின்னர் காதலி பிரியானாவே பதறிப்போய் அந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்த நிலையில், காவல்துறையினர் ப்ரியானாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு அவர் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1½ ஆண்டு காலம் ஒன்றாக பகிர்ந்து கொண்ட படுக்கையில் அந்த இளைஞர் இது போன்ற செயலை செய்தது தன்னை கோபப்பட வைத்ததாக பிரியானா தெரிவித்துள்ளார். எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு என்பது அந்த இளைஞரும் தன்னை தாக்கினார்.

ஆகவே சுய பாதுகாப்பு முயற்சியாக தான் நான் அவரை கத்தியால் குத்தினேன் என்று பிரியானா வாக்குமூலம் வழங்கியுள்ளார்.படுக்கையில் சிறுநீர் கழித்ததால் உண்டான தகராறு இறுதியில் கொலை வெறி தாக்குதலாக முடிவுக்கு வந்திருக்கிறது.

Next Post

ஹோட்டல் ஊழியர்களுக்கு மருத்துவச் சான்று கட்டாயம்..!! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு..!!

Thu Jan 19 , 2023
கேரள மாநில ஹோட்டலில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஹோட்டல்களில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் பலருக்கும் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து, ஹோட்டல்களில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களில் நடந்த ஆய்வில் 112 ஹோட்டல்கள் சீல் வைக்கப்பட்டன. 578 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள […]
ஹோட்டல் ஊழியர்களுக்கு மருத்துவச் சான்று கட்டாயம்..!! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு..!!

You May Like