”குடிக்க பணம் கேட்டா இல்லைன்னு சொல்லுவியா”..? ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி..!! கணவன் வெறிச்செயல்..!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (45). இவரது மனைவி செல்வி (35). இவர்கள் தற்போது பரமத்திவேலூரை அடுத்த வேட்டுவங்காடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இரவு மனைவி செல்வியிடம் மாதேஷ் மது வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார். அப்போது செல்வி பணம் கொடுக்க மறுத்து விட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாதேஷ், அங்கிருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது, வலி தாங்க முடியாமல், செல்வி கத்தியதால் அக்கம்பத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வியை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாலி கட்டிய மனைவி குடிக்க பணம் தராததால் கணவர் அரிவாளால் வெட்டி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

CHELLA

Next Post

'லியோ' படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புதிய புகைப்படம்..!! விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ்..!!

Tue Mar 14 , 2023
‘எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி அண்ணா’ என நடிகர் விஜய்-க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். முன்னதாக மாஸ்டர் […]
FrKq1eQXwAA3d9O

You May Like