என்னடா இது அதிசயம் திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற மணமகள்…..! அதிர்ச்சியில் உறைந்த மணமகன் குடும்பத்தார்….!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் ஜெகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடந்தது. அன்றைய தினம் இரவே மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்ததால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மணமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


அங்கே அந்த மணப்பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர்.

மணமகளின் வயிறு சற்றே பெரிதாக இருந்ததற்கு காரணம் அவரது கிட்னியில் இருந்த கல்லை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்தது தான் என பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக சேர்ந்து மணமகன் வீட்டாரை ஏமாற்றி திருமணத்தை முடித்து வைத்திருப்பதால், மணமகன் வீட்டை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை மணமகள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்து விட்டனர். திருமணமான மறுநாளே குழந்தை பிறந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

திடீரென சீரியல் நடிகை காயத்ரிக்கு குவியும் வாழ்த்துகள்..!! இதுதான் காரணமா..?

Sat Jul 1 , 2023
‘மானாட மயிலாட’ என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் காயத்ரி. இந்நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்த இவர், பின்னர் மெல்ல மெல்ல சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்னும் சீரியலில் நிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு போன்ற சீரியல்களில் […]
திடீரென சீரியல் நடிகை காயத்ரிக்கு குவியும் வாழ்த்துகள்..!! இதுதான் காரணமா..?

You May Like