உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் ஜெகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடந்தது. அன்றைய தினம் இரவே மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்ததால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மணமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கே அந்த மணப்பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர்.
மணமகளின் வயிறு சற்றே பெரிதாக இருந்ததற்கு காரணம் அவரது கிட்னியில் இருந்த கல்லை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்தது தான் என பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக சேர்ந்து மணமகன் வீட்டாரை ஏமாற்றி திருமணத்தை முடித்து வைத்திருப்பதால், மணமகன் வீட்டை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை மணமகள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்து விட்டனர். திருமணமான மறுநாளே குழந்தை பிறந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.