XBB 1.16 கொரோனா மாறுபாடு குறித்து WHO வெளியிட்ட தகவல்.. அறிகுறிகள் என்னென்ன..? யாருக்கு அதிக ஆபத்து..?

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது..

corona

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரானின் XBB.1.16 மாறுபாட்டை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.. உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் இதுகுறித்து பேசிய போது “ உலகளாவிய கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகள் தொடர்ந்து குறைந்து வந்தாலும்.. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. XBB.1.16 இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பிற துணை வகைகளை மாற்றியுள்ளது.. எனவே இது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இது சில மாதங்களாக புழக்கத்தில் உள்ளது… இதுவரை, 22 நாடுகளில் இருந்து XBB.1.16 பாதிப்பு பதிவாகி உள்ளது.. குறிப்பாக பெரும்பாலும் இந்தியாவில் பதிவாகி உள்ளது..” என்று தெரிவித்தார்..

XBB.1.16 மாறுபாடு என்றால் என்ன? XBB.1.16 என்பது ஓமிக்ரானின் துணை மாறுபாடு ஆகும். இது இரண்டு ஒமிக்ரான் வகைகளின் மறுசீரமைப்பு ஆகும். ஒமிக்ரான் மற்றும் அதன் மாறுபாடுகள் பொதுவாக எளிதில் பரவும் தன்மை கொண்டது.. மேலும் இந்த மாறுபாடு நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

XBB.1.16 அறிகுறிகள் : இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை. மற்ற கொரோனா வகைகளைப் போலவே அறிகுறிகளை கொண்டுள்ளது.. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த அறிகுறிகள் பொதுவாக 4 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது..

  • காய்ச்சல்
  • சளி மற்றும் தடுக்கப்பட்ட மூக்கு
  • தொண்டை வலி
  • தலைவலி
  • உடல் சோர்வு
  • தசை வலி

XBB.1.16: யார் அதிக ஆபத்தில் உள்ளனர்? கொரோனா என்பது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு சுவாச நோயாகும். வயதானவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்..
  • நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும்
  • சானிடைசரை கொண்டு கைகளை கழுவ வேண்டும்.
  • நல்ல கை சுகாதாரத்தை பராமரிக்கவும்
  • தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

RUPA

Next Post

கேரள ரயிலில் தீ.. டைரியில் ‘கன்னியாகுமரி’... பயங்கரவாத சதியா என காவல்துறை விசாரணை...

Mon Apr 3 , 2023
கேரள ரயிலில் ஏற்பட்ட தீ சம்பவம் பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. நேற்றிரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட […]
kerala train fire

You May Like